எழுத்தாளர்களுக்கு கரம் கொடுத்து இன்பத் தமிழ் வளர்க்கும் புரவலர் புத்தகப்
பூங்காவின் இலவசத் திட்டத்தி லான 28 வது மலர் இம் மாதம் 18ம் திகதி ஞாயி ற்றுக்கிழமை
பி.ப. 4.30 மணிக்கு வெளியிடப் படவுள்ளது.
கவிஞர் கிண்ணியா அமீ அலி அவர்களின் “மனையாளும் மறுபதிப்பும்” எனும் கவிதைத் தொகுப்பு
நூலே புரவலர் பூங்காவின் 28வது வெளியீடாகும்.
பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாஷிம் உமரின் முன்னிலையில் திரு. ஆர். பாரதி அவர்களின்
தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்ட பத்தில் இவ் வெளியீட்டு விழா நடைபெறும்.
புனரமைப்புச் செய்யப்பட்ட புரவலர் புத்தகப் பூங்காவின் தற்போதைய செயலாளர் நாயகம்
கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர்கனி வரவேற்புரையும், கவிஞர் கனிவுமதி நய உரையும், மெளலவி
முபாரக் ஏ. மஜீத் நன்றியுரையும், நூலாசிரியர் ஏற்புரையும் வழங்கும் இவ்வெளியீட்டு
விழா நிகழ்ச்சிகளை ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். நவாஸ் தொகுத்து வழங்குவார்.