ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு பெற்றுத்தரும் நடவடிக்கை மேலும் வலுப்பெறும்.
ஜெனீவா மாநாட்டில் இடம்பெறும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தகர்த்தெறிந்து அதற்கு
ஆதரவு பெற்றுத் தரும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படுவதற்கு
இலங்கைப் பிரதிநிதிகள் குழு திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலைமை இல்லையென
ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் கூறி இருந்தார்.
இந்த வகையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு எதிராக
கருத்துக்களை முன்வைக்கவும் இலங்கைக்கு ஆதரவு பெற்றுத்தரவும் பல நாடுகள்
முன்வந்துள்ளன.
இந்தவகையில் இலங்கை எதிர்கொள்ளும் சோதனைகளுக்கு எதிராக ஆதரவு வழங்குவதற்கென
முன்வந்துள்ள நாடுகள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கைகள்
அமைந்துள்ளன.