யாழ். வைத்தியசாலைக்கு தமது இரத்தத்தை வழங்கிய படையினர்!
அவசர தேவைக்கு வேண்டுகோள் விடுப்பு;
யாழ். வைத்தியசாலைக்கு தமது இரத்தத்தை வழங்கிய படையினர்!
அவசர இரத்த தேவை நிமித்தம், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் விடுத்த
வேண்டுகோள்களுக் கிணங்க, யாழ். பாதுகாப்புப் படையினர் இரத்ததான நிகழ்வொன்றை ஏற்பாடு
செய்திருந்தனர்.
சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள இரத் தத்தின் தேவை போதாமையின் காரணமாக பல நோயாளிகள்
காத்துக் கொண்டிருந்த வேளையில், ஆரியாலையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் 512ஆவது
படைப் பிரிவின் 23ஆவது கஜபா படைப் பிரிவினரால் இவ் இரத்ததானம் வழங்கப் பட்டுள்ளது.
இதைத் தவிர 51ஆவது பிரிவின் படையினரும் பொலிஸாரும் இணைந்து 332 பெயிட் இரத்ததானம்
செய்துள்ளனர்.
இந் நிகழ்வில் யாழ்போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக். ஸ்ரீ பகவராஜா,
511ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் அஜித் பல்லவல, வைத்தியர்கள் மற்றும்
தாதிமார்களும் கலந்துக் கொண்டனர்.