ஜனாதிபதி முன்னிலையிலேயே முதலமைச்சர் பதவிப்பிரமாணம்
ஜனாதிபதி முன்னிலையிலேயே முதலமைச்சர் பதவிப்பிரமாணம்
வடமாகாணசபைத் தேர் தலில் போட்டியிட்டு வெற்றி யீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
முதலமைச்சர் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன் னிலையில் பதவிப் பிரமாணம்
செய்து கொள்ள உள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகளை நடத்த உள்ளதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தி ருந்தது. எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை
காலை 9 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் அலரி மாளிகையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம்
செய்து கொள்ள உள்ளார். இதேவேளை, இதுவரையில் அமைச்சர்கள் பற்றிய தீர்மானம்
எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் எதிர்வரும்
11ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரின் முன்னிலையில் கூட்டமைப்பின்
உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பு
தகவல்கள் தெரிவிக்கின்றன.