கூட்டமைப்பிற்குள் வழமையான வெளிக்காட்டா குத்துவெட்டு
நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் அதிகூடிய உறுப்பினர்களுடன் வட மாகாணசபையை
கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் வழமையான வெளியே தெரியாத நிலையிலான
குத்துவெட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
தேர்தல் காலங்களில் கிளி நொச்சியில் வீடுவீடாக சென்று தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பிற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் ஆனந்தசங்கரிக்கு
வாக்களிக்க வேண்டாமென பிரசாரம் செய்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போது
மீண்டுமொரு போர்க்கொடியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தூக்கியிருக்கின்றார்.
தனது இருப்பினை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையுடன் மட்டுமே அரசியல்
வியாபாரம் நடத்தும் கிளிநொச்சி எம்.பி ஒருவர் ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனமோ அல்லது
சித்தார்த்தனுக்கு அமைச்சு பதவியோ வழங்கப்படுமானால் தான் பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யப்போவதாகவும் ஒரு கதையைப்
பரப்பிவிட்டிருக்கின்றார்.