வவுனியாவிற்கும் இரத்மலானைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இலங்கை விமானப் படை
யினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கான போக்குவரத்தை இலகுபடுத்தவே இந்த விரைவான சேவையை
ஆரம்பித்துள்ள தாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரி வித்துள்ளார்.
விமானத்தில் பயணிக்கும் பயணி களிடமிருந்து தலா 6 ஆயிரத்து 600 ரூபா பயணக் கட்டணமாக
அறவிடப்படும் எனவும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தச் சேவை விஸ்தரிக்கப்படும்
எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வவுனியா விமானப் படைத் தளத்தில் பயணிகள் காத்திருப்பதற்கான வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.