புத்தளம், மன்னார் வீதியில் சமகி கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற
வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தையடுத்து மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கி வெடித்து தீப்பற்றிக்
கொண்டதில் அந்த தீயில் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் தீப்பற்றிக்
கொண்டுள்ளது.
இவ்விபத்தில் வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த சாமிநாதன் நந்தகுமார் (வயது 29)
என்ற ஒரு பிள்ளையின் தந்தையும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. எம். அசங்க பண்டார
(வயது 18) என்ற இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.
இவர்களது பிரேதங்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இவ்விருவரும் மன்னார் வீதியில் பத்தாம் கட்டைப் பிரதேசத்தில் வாகன சேர்விஸ் நிலையம்
நடாத்தி வந்தவர்கள் எனத் தெரிவிக்கப் படுகின்றது. இந்த விபத்தையடுத்து தீப்பற்றிக்
கொண்ட டிப்பர் வாகனத்தின் தீயை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அணைத்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வண்ணாத்திவில்லு பொலிஸார்
டிப்பர் வாகன சாரதியைக் கைது செய்துள்ளனர்.