புறக்கோட்டையில் சூதாட்ட
நிலையங்கள் முற்றுகை
முகாமையாளர் உட்பட
94 பேர் கைது மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழு அதிரடி
சூதாட்ட நிலையங்களைச் சுற்றிவளைக்கும் விசேட வேலைத்திட்டங்கள்
தொடர்ந்தும் முன்னெடுப்பு
கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஐந்து சூதாட்ட
நிலையங்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப் பட்ட இந்த அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்
போது சூதாட்ட நிலையங் களின் முகாமையாளர்கள் உட்பட 94 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில்
பெண்ணொருவரும் அடங்கும்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரசேன
நாயக்கவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரது ஆலோசனைக்கு அமைய
மாளிகாகந்தை மஜிஸ்திரேட் நீதவானிடமிருந்து தேடுதல் நடத்துவதற்கான அனுமதியை பெற்ற
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த அதிரடி சுற்றிவளைப்பை நேற்று முன்தினம்
மேற்கொண்டுள்ளனர்.
விவரம் |