மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியி டும் வேட்பாளர்களுக்கான விருப்பு
இலக்கங்கள் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கூடாக நாளை (11)
வழங்கப்படவுள்ளன.
மாகாண சபை தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய வேட்பாளர்களின் பெயர் முதலெழுத்துக்கள்
அடிப்படையில் சிங்கள அகரவரிசை ஒழுங்கில் தேர்தல்கள் அலுவலகத்தினால்
தீர்மானிக்கப்பட்டிருக்கும் விருப்பு இலக்கங்கள் தற்போது சிரேஷ்ட அதிகாரிகளின்
பரிசீலனைக்கு உற்படுத்தப் பட்டு வருவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட்
கூறினார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் இறுதிச் சுற்று பரிசீலனைக்குப் பின்னர்
நாளை வேட்பாளர்களுக்கு வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இதற்கிணங்க தேர்தலில் போட்டி யிடவுள்ள 3 ஆயிரத்து 794 வேட்பாளர்களும் கொழும்பு,
களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களிலுமுள்ள
தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கூடாக நாளை தமது விருப்பு இலக்கத்தினைப் பெற்றுக்
கொள்ளக் கூடியதாகவிருக்கும்.