ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

சிகரெட் பக்கெற்றுக்களில் புகைப்பட அறிவுறுத்தல்

சிகரெட் பக்கெற்றுக்களில் புகைப்பட அறிவுறுத்தல்

மே 12இல் தீர்ப்பு

சிகரெட் பக்கற்றுகளில் புகைப்பட அறிவுறுத்தல்களை இடம்பெறச் செய்யும் வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் மே 12ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்படும்.

சுகாதார அமைச்சும், இலங்கை புகையிலைக் கம்பனியும் தமது சமர்ப்பணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளன. புகைப் படங்களுடன் கூடிய அறிவுறுத்தல்களை வழங்க தற்போதுள்ள சட்டத்தில் இடமில்லையென புகையிலைக் கூட்டுத்தாபன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

சிகரெட் பக்கெட்டுகளில் 70 வீத அறிவுறுத்தல்களை உட்படுத்தித இயலாது. கம்பனியின் வர்த்தக இலச்சினையை பொறிக்க இதனால் இடம் கிடைக்காதென கம்பனி தெரிவித்தது.

புதிய பிரமாணங்களை நடைமுறைப் படுத்த அதிக காலத்தை வழங்க அரசு விருப்பம் கொண்டிருந்ததாக அரச வழக்குரைஞர் தெரிவித்தார்.

பிரமாணங்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் அது பிரசுரிக்கப்பட்டு 17 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மூன்று மாதங்களின் பின்னர் பிரமாணங்கள் நடைமுறைக்கு வர இருந்தன. இருப்பினும் புகையிலைக் கம்பனிகள் இப்பிரமாணங்கள் தொடர்பாக வாதிட்டனர். வழக்கு விசாரணையும் தொடர்ந்தது. (எப்.எம்.)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி