ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

வட பகுதியில் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளை கண்டறிய வேலைத் திட்டம்

வட பகுதியில் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளை கண்டறிய வேலைத் திட்டம்

வட பகுதியில் பெண் கள், சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் கண்டறியும் ஒரு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இது பற்றித் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்விடயமாக மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். யாழ்ப்பாணம், ஸ்ரீஜயவர்தனபுரம், களனி, திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் உதவியுடன் இந்த ஆய்வு முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டது.

கெயார் சர்வதேச நிதி உதவியுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த ஆய்வின் முதற் கட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வட மாகாண மாவட்ட, பிரிவுச் செயலகங்களில் சிறுவர், மகளிர் அபிவிருத்தி பிரிவுகள் மூலமாக இத்திட்டத்தை மேற்கொள்ளவும் அமைச்சு கருதியுள்ளது. (எப்-எம்.)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி