ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

சாரணர் ஜம்போரியில் பங்குபற்றியவர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு

சாரணர் ஜம்போரியில் பங்குபற்றியவர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு

போதைவஸ்து பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமிலிருந்து சாரணர்களின் ஜம்போரியில் பங்குபற்ற வந்த (45 வயது) ஒருவர் நீர்த் தேக்கத்தில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை நுவரெலியா மொரயல்ல என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது இலங்கை சாரணர்களின் ஜம்போரி நுவரெலியா மொரயல்ல என்ற இடத்தில் நடைபெற்று வருகின்றது

இதில் பங்குகொள்ள பதுளை போதைவஸ்து பாவனையாளர் புனர் வாழ்வு முகாமிலிருந்து சிலர் அனுப்பிவைக்கப் பட்டிருந்தனர். இவர்களில் ஏ. அஜந்த (வயது 45) என்பவர் கடந்த 8 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அங்குள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி