வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010


தங்காலை தேர்தல் தொகுதியிலுள்ள மெதமுலன டீ. ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களிக்கிறார்.

 

 

அமைதியான தேர்தல்:
சுறுசுறுப்பான வாக்களிப்பு


இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது.வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்றதுடன், நாடளாவிய ரீதியில் சுமார் 70 வீத வாக்களிப்பு இடம்பெற்றதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

விவரம் »

 

பொன்சேகா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஐ.ம.சு.மு. தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப் புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா இலத்திரனியல் ஊடகங்களில் தோன்றி பேசியமை தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு உடனடியாக செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விவரம் »
 



இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா கொத்தணி வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் நோக்கி வருவதையும், சிலாபம் விஜயகட்டுப்பொத்த வாக்குச் சாவடியில் மக்கள் வரிசையில் காத்துtநிற்பதையும் காணலாம். (படங்கள்: பந்துல செனவிரத்ன, பேர்ஸி பெர்னாண்டோ)