ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, JANUARY 27, 2010
இரு பெற்றோல் குண்டு வீச்சு; வாக்களிப்பில் பாதிப்பில்லை
யாழ்ப்பாணத்தில்
இரு பெற்றோல் குண்டு வீச்சு;
வாக்களிப்பில் பாதிப்பில்லை
(லக்ஷ்மி பரசுராமன்)
யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்
வாக்களிப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென இராணுவப் பேச்சாளர்
பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
வல்வெட்டித்துறைக்கும் உடுப்பிட்டிக்கும் இடைப்பட்ட வீதியில் நேற்று அதிகாலை இரண்டு
பெற்றோல் குண்டுகள் வெடித்துள்ளன.
இருப்பினும் இக்குண்டு வெடிப்புக்க ளால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லையெனவும்
இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். வாக்குச்சாவடிகள் அமையப் பெற்றிராததும்
ஆள்நடமாட்டம் இல்லாததுமான வீதியி லேயே பெற்றோல் குண்டுகளை இனந் தெரியாதோர் வெடிக்கச்
செய்திருப்பதனால் வாக்களிப்பில் இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும்
அவர் தெரி வித்தார்.
அதிகாலை வேளை குறித்த பிரதேச மொன்றிலிருந்து சத்தம் கேட்டதாக
பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப் பட்டதையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ
இடத்துக்கு விரைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.