ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, JANUARY 27, 2010
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கைது
சம்மாந்துறை
பிரதேச சபை
தவிசாளர் கைது
(அம்பாறை மத்திய குறூப் நிருபர்)
சம்மாந்துறையில் பல வெவ்வேறு இடங்களில் இரு கட்சி தரப்பினருக்குமிடையில் முறுகல்
நிலை ஏற்பட்டதையடுத்து சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம். ஐ. எம். மன்சூர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும் இச் செய்தி எழுதும் வரை அவர்
விடுவிக்கப்படவில்லை.
எது எவ்வாறிருப்பினும், மாவட்டத்தின் பல பாகங்களிலும் வாக்களிப்பு சுமுகமாக
நடைபெற்றது.
எனினும் அம்பாறை மாவட்டத்தில் நேற்று பி.ப. 3.00 மணி வரை 70 வீதத்திற்கும் மேற்பட்ட
மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். (ரு-ஜ)