வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

உலகம் அழிந்து போகுமா?

உலகம் அழிந்து போகுமா?

உலகம் அழிந்துதான் போகுமா? ஆமாம்... என்று சொல்பவர்கள் அதற்காக அடுக்கும் காரணங்கள் நிறைய... நிறைய...! ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

உலகின் முதல் கலண்டரை உருவாக்கியவர்கள் மாயன் எனும் பழங்குடி இனத்தவர்கள். பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் காலத்தைக் கணக்கிட்டார்கள்.

நொடிகளாகவும், நிமிடங்களாகவும் காலத்தைப் பிரித்து நாட்களை கணக்கிட்டு வருடங்களாகப் பிரித்து கலண்டரை உருவாக்கினார்கள். உலக மக்கள் மத்தியில் அது ‘மாயன் கலண்டர்’ என அழைக்கப்படுகிறது- மாயன் கலண்டன் அந்த நாளுடன் முடிவடைகிறது. அதாவது பூமி தன் இயக்கத்தை அன்று நிறுத்திக் கொள்ளும் என்கிறார்கள்.

உலகின் உயிர்கள் வாழ ஆதார சக்தியாக இருப்பது சூரியன். அதன் ஒளி இல்லாமல் உயிர்கள் இல்லை. உயிர்களை வாழ வைக்கும் சூரியன் தனது பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.

அதனால்தான் விண்ணில் ஏவப்பட்ட பல செயற்கை கோள்கள் தொடர்ச்சியாக செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன. அதன் உச்சமாக அந்த நாளில் சூரியன் நோஞ்சானாகி, நொடிந்து போய் பூமிக்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.

மனிதன் விஞ்ஞானத்தின் உச்சியில் இருக்கிறான். ஆனாலும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது. பூமி எவ்வாறு தனி கோளானது. அனைத்து கிரகங்களும் எப்படி சூரியனை சுற்று கின்றன, பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பன போன்ற கேள்விக ளுக்கு தெள்ளத் தெளிவாக நவீன மனிதனின் மூளையாலும் இன்றுவரை விடை தேட முடியவில்லை.

விடை அறியும் முயற்சிக்காக, செயற்கையான முறையில் ஒரு அதிர்ச்சியை அரங்கேற்ற திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய விஞ்ஞானிகள், பூமிக்கு அடியில் 27 மைல் பரப்பளவில் ஒரு பிரமாண்ட தொட்டி அணு கதிர் வீச்சை தாங்கும் விதமாக அமைக் கப்பட்டு வருகிறது.

அது கட்டி முடிக்கப்பட்டதும், லட்சக் கணக்கான அணுக்களை அந்த தொட்டிக்குள் செலுத்தி, ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு அதன் விளை வுகளை வைத்து சோதனை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. சோதனையின் போது எழு ம்பும் அணு சக்தியை அந்த தொட்டி தாங்காமல் வெடித்து சிதறினால் உலகில் உள்ள உயிர்களையும் அழித்து விடும். இந்த ஆய்வு நடப்பதும் அந்த நாளில் தானாம்.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை ஆராய்ந்த மத ஆராய்ச்சி யாளர்கள் சிலர் நன்மைக்கும் தீமைககும் இடையிலான இறுதி யுத்தம் கிட்டத்தட்ட அந்த நாளில் தான் நடக்கும் என்றும், அதன் இறுதியில் உலகம் அழியும் என்றும் கணித் திருக்கிறார்களாம்.

இந்து மதத்தின் பல புனித நூல்களும் கலிகாலத்தின் உச்சம் நெருங்கிக் கொண்டிருப்பதாக கட்டியம் கூறுகிறதாம்.

6,50,000 வருடங்களுக்கு ஒரு முறை பேரழிவுகளை ஏற்படுத்தும் எரிமலைகள் வெடிக்கும். வெடிக்கும் போது எரிமலை குழம்புகளோடு சேர்த்து வானத்தில் வீசப்படும் சாம்பலின் அளவு சுமார் 15,000 ஆண்டுகள் சூரியனை மறைக்கும்.

அதனால் பூமி வெப்பத்தை இழந்து உறை நிலைக்கு போய்விடும். டைனோசர் போன்ற விலங்குகள் அழிந்து போனதற்கு கடந்த முறை ஏற்பட்ட இந்த எரிமலை பேரழிவுதான் காரணம் என்கிறார்கள். அந்த காலம் மீண்டும் நெருங்குகிறதாம்! அதுவும் அதே நாளில் தான்!

பூமி வட, தென் என இரு துருவங்களைக் கொண்டது. இந்த இரு துருவங்களில் இருந்து வெளிப்படும் காந்த புலன்களே சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்களை தாங்கி உயிர்களை வாழவைத்துக் கொண்டி ருக்கின்றன. இந்த துருவங்கள் 75,00,000 வருடங்களுக்கு ஒரு முறை மாறிக் கொள்ளும் தன்மையுடையது.

அதாவது ஒவ்வொரு 75,00,000 வருடங்களுக்கு ஒரு முறையும் வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் மாறிக் கொள்ளும்.

அவ்வாறு மாறும் போது ஏற்படும் காந்தப் புலன் சமச்சீரின்மையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, சூரி யனின் வெப்ப கதிர்கள் பூமியை தாக்கும். அப்போது அனைத்து உயி ர்களும் இறந்துபோகும். இதுவும் அந்த நாளில்தான்...!

சரி இதெல்லாம் உண்மையோ... பொய்யோ எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். உலகம் அழிந்து போவதை நினைத்து மனிதனுக்கு ஏன் இத்தனை கவலை! உலகம் அழிந்துபோனால் தானும் இறந்துபோவோமே என்ற கவலைதான்! (தொடரும்)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •