ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, JANUARY 27, 2010
கிண்ணியா - மூதூர் கெங்கை பாலத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்
கிண்ணியா - மூதூர் கெங்கை பாலத்தின்
நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்
(திருமலை மாவட்ட விசேட நிருபர்)
கிண்ணியாவுக்கும் மூதூருக்கும் இடைப்பட்ட கெங்கை பாலத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த
மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார
சபையின் பிரதம பொறியியலாளர் ஏ.சீ. நிசார்தீன் தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,500 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ்
கெங்கைப் பாலம் உட்பட 05 பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இவற்றில் மூன்று பாலங்களுக்கான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம்
நடுப்பகுதியில் கெங்கை பால நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள அதேவேளையில்,
இவ்வருடம் மே மாதம் உப்பாறு பால நிர்மாணப் பணியும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதம
பொறியியலாளர் நிசார்தீன் மேலும் தெரிவித்தார். (ஐ-எ)