இப்போது தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல்
வன்முறைகள் நடத்தப்படுகின்றன. அதிலிருந்து தப்பிக்க வீட்டில் தனியாக இருக்கும்
பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்வென்று பார்க்கலாம்.
* வீட்டின் வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள்.
மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.
* முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத்
திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.
* ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது
சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.
* மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில்
யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால்,
கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.
* வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது.
வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை
சொல்லவே கூடாது.
* எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின்
உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.
* வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு
செல்வதே பாதுகாப்பானது.
இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப்
பார்த்து கூச்சல் போடக் கூடாது.
ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம்.
அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது
வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம்.
அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு