புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாய கியாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:-

'அழகு என்பது மனது சம்பந்தமானது. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் தன்னம்பிக்கை வளரும். அந்த தன்னம்பிக்கை ஒருவரை அழகாக காட்டும். எனக்கு நல்ல எண்ணங்களும், தன்னம்பிக்கையும் நிறைய இருக்கிறது.

என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் காரணம். தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சியை நடிகைகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. எல்லோரும் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.

எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வேலை இல்லாமல் இருந்தால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடும்.

பார்வை இல்லாதவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படி சிரமப்படுவார்கள் என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும். இதற்காகவே நான் மும்பையில் நடத்தும் அழகு நிலையத்தில் பார்வையற்றவர்களை வேலைக்கு வைத்துள்ளேன்.

பெண் சுதந்திரம் பற்றி பேசப்படுகிறது. என்னை கேட்டால் ஆணுக்கும் சுதந்திரம் வேண்டும் பெண்ணுக்கும் சுதந்திரம் வேண்டும். ஆண் இல்லாமல் பெண் இல்லை.

பெண் இல்லாமல் ஆண் இல்லை. இருவரும் சேர்ந்தால்தான் எதுவும் சாத்தியமாகும். எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் என்பது எனக்கு ஏற்கனவே தலையில் எழுதப்பட்ட வி'யம். நேரம் வரும்போது எனக்கான அந்த ஆள் என் எதிரில் வந்து நிற்பார்.

அப்போது அவர் மீது காதல் வரும். திருமணமும் செய்துகொள்வேன். எனக்கு கணவராக வருபவர் பெண்களை கௌரவிப்பவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.