கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.
வயிறானது பெரியதாக மாறும் போது, எந்தப் பக்கமும் திரும்பி தூங்க முடியாது. மேலும்
அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது,
தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும்.
ஆனால், கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும்
குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.
* பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில்
தூங்க தோன்றும். அப்படி பகலில் தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே,
பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
* கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு
உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும்.
இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
* மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால்
தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே, மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன
அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி
போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால்
நல்ல தூக்கமும் வரும்.