உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்
உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன்
சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் இலங்கைக்கு வருவதை தடைசெய்து
ராஜபக்ஷ அரசாங்கம் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு நேற்று
முன்தினம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் உலக
தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளுக்கும் நபர்களுக்குமான தடை நீக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
ராஜபக்ஷ 1854/41 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை
வெளியிட்டிருந்தார்.
அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் 17 அமைப்புகள்
தடைசெய்யப்பட்டதுடன் 424 நபர்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழி ஒன்றில் இருந்து
கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தடைவிதிக்கப்பட்டதாக
கடந்த அரசாங்கம் கூறியது.
தற்போது உயிருடன் இல்லாத நபர்களின் பெயர்களும் தடைசெய்யப்பட்டவர்களின் பட்டியில்
இடம்பெற்றிருந்தது.