பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90 ஆவது பிறந்த தினம் நாளை 23 ஆம் திகதி
திங்கட்கிழமை உலகம் பூராவும் கொண்டாடப்படுகிறது. புட்டபர்தியில் விசேட
பிரார்த்தனைகள். பஜனைகள் இடம்பெறும் அதேவேளை கொழும்பிலும் ஸ்ரீ சத்தியசாயி மத்திய
நிலையத்திலும் பஜனை வழிபாடுகள் இடம்பெறுவதுடன் நாட்டில் பல பாகங்களிலும்
பிரார்த்தனைகள் இடம் பெறும்.
வத்தளையில்....பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 90வது
பிறந்த தினத்தை முன்னிட்டு வத்தளை சாயி பஜன் மண்டலியினரின் 10 ஆம் ஆண்டு நிறைவை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பஜனை பூஜை வழிபாடுகள் சொற்பொழிவு, பிரசாதம்
வழங்குதல் என்பன இன்று 22 ஆம் திகதி ஞாயிறு பி. ப. 3.30 க்கு வத்தளை நகர சபை
மண்டபத்தில் நடைபெறும்.
அனைவரும் இந்த வழிபாட்டில் கலந்துகொள்ளுமாறு வத்தளை சாயி மண்டலியினர்
கேட்டுக்கொள்கின்றனர்..