நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட
வேண்டும்
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட வேண்டும்
மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ்
(டயகம தினகரன் நிருபர் கே.கணேஷ்)
மலையக பெருந்தோட்ட பாடசாலை களில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும்
பொருட்டு வழங்கப்படவிருந்த ஆசிரிய உதவி யாளர் நியமனத்தை புதிய அரசாங்கம் தனது நூறு
நாள் வேலைத்திட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாண சபை
உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவருமான கணபதி கனகராஜ் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
பெருந்தோட்டப் பாட சாலைகளின் ஆசிரியர் தேவையை நிவர்த்தி செய்யுமாறு
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று
வர்த்தமாணி வெளியி டப்பட்டு, போட்டிப் பரீட்சையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரீட்சைகள் திணைக்களத்தி டமிருந்து பரீட்சை பெறுபேறுகளை பெற்று
நேர்முகப்பரீட்சையை நடத்தி நியமனம் வழங்கவேண்டிய தருவாயில் புதிய அரசாங்கம் நாட்டை
பொறுப்பேற்றுள்ளது.
பெரும்பாலான பின்தங்கிய பெருந்தோட்ட பாடசாலைகளில் பாடரீதியிலான ஆசிரிய தட்டுப்பாட்டை
இந்த நியமனத்தின் ஊடாக நிவர்த்திக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளையில்
பரவலாக மலையக தமிழ் மொழிமூல பாடசா லைகளுக்கு கட்டிட, தளபாட, விஞ்ஞான ஆய்வுகூட தேவைப்
பாடுகளும் பெருமளவில் காணப்படுகின்றது.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நூறு நாள்
வேலைத்திட்டத்தை ஆரம்பித் திருக்கிறார். இவ்வேலைத்திட்டத்தில்; மலையகமும் உள்வாங்கப்
படுமென எதிர்பார்க்கிறோம். மலையக பிரதேசங்களில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பல்வேறு
பிரச்சினைகள் இனங் காணப்பட்டுள்ளன.
இவற்றுள் மலையக மாணவர்களின் கல்வித் தேவைகளை
நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை
வழங்கு வதனூடாக மலையகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்
யுவதிகளின் ஒரு பிரிவினரின் தொழிற் பிரச்சினை, மற்றும் ஆசிரிய தேவையின் ஒரு பகுதி
என்பவற்றிற்கு தீர்வுகாணமுடியுமென்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மத்திய
மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.