புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

பட்டுப் புடவையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்

பட்டுப் புடவையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்

பொதுவாக பட்டுப் புடவையை விரும்பாத பெண்களே கிடையா என்று சொல்லலாம். ஆனால், இதை பிற துணிகளை போல் துவைத்து மடிப்பது மட்டும் போதாது. இதை பாதுகாக்க சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

சரியான பராமரிப்பு இல்லையேல் சில தினங்களிலேயே பட்டுப் புடவை பழைய புடவையாகிவிடும்.

பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது.

பட்டுப்புடவையை இஸ்திரி செய்யும் போது அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம்.

முதலில் துவைக்கும் போது சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில் உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும். பட்டுப் புடவைகளை சலவை இயந்திரத்தில் போட்டுத் துவைப்பதைவிட கையால் துவைப்பதே நல்லது.

பட்டுப் புடவைகளை காற்று புகாத பொலித்தீன் சுவர்களில் வைப்பது நல்லதல்ல. துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.

பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவைகளின் மேல் போட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் பட்டுப்புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு முறை காரணமாக அமைகிறது.

ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.

ஒருபடி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும். பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவை சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.