தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும்
சிக்கலில் உள்ளது கர்நாடக அரசு. இதனால் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட் டுள்ள
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகம் விரும் புகிறது.
கடந்த மாம் 27 ஆம் திகதி 66.65 கோடி ரூபா சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கின்
தீர்ப்புக்காக பெங்களூர் சென்ற ஜெயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளியாக
அறிவிக்கப்பட்டு, அங்கேயே சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் அடைக்கப்பட்ட
மத்திய சிறைச்சாலை வளாகத்திலும், சிறைச்சாலையைச் சுற்றிலும் அ. தி. மு. க.
தொண்டர்கள் பெருமளவில் நாள்தோறும் குவிந்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் நீதிமன்றமும் மாநில அரசும்
திணறி வருகிறது. இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால்,
மாநில ரிசர்வ் பொலிஸ் படைகொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.