அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப் புடன் பேசப் போவதில்லை
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சு நடத்தப்படவுள்ளது. தமிழ் - முஸ்லிம் சமூகம்
எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் காணி மற்றும்
பாடசாலை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. கடந்த வாரம் இந்த
சந்திப்பு நடத்தப்படவிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த
சந்திப்பு நடத்தப்படவில்லை. எதிர்வரும் வாரத்தில் கொழும்பில் இந்த சந்திப்பு
நடத்தப்படவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.