ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ‘என்னால் முடியாது’
என்று ஒரு போதும் சொல்லாதீர்கள். எண்ணாதீர்கள். நீங்கள் வரம்பில்லா வலிமை
பெற்றவர்கள். எதையும் எல்லாவற்றையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.
மனித வரலாற்றை முழுவதும் பார்க்கும் போது, ஆணோ, பெண்ணோ வரலாற்றில் சிறப்புடன்
விளங்கினார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம். அவர்களது தன்னம்பிக்கைத்தான்.