புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி ஜனாதிபதி முகர்ஜ முன்பாக பதவிப்பிரமாணம்

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நாளை 26 ஆம் திகதி திங்கட்கிழமை பதவியேற்கிறார். இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அவருக்குப் பதவிப் பிரமாணம், இரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றை குடியரசுத் தலைவரான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செய்து வைக்கவுள்ளார். இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் அதிகாரத்ததைப் பெற்றது. ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜ.க, கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இந்திய நாடாளுமன்றில் நடந்தது. இதில் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்க ஒருமனதாக ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                                                            விவரம்»

 

 

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங் களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கொழும்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் பிரபா கணேசனிடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம்.

அழைப்பை ஏற்றார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மோடி பதவி யேற்பு விழாவில் சார்க் கூட்டமைப் பில் உள்ள நாடு களின் தலைவர்கள் அனைவரும் பங் கேற்பது உறுதி யாகியுள்ளது. ரேடியோ பாகிஸ் தான் ஒலி பரப்பு நிறுவனம், இந் தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என செய்தி வெளியிட்டுள்ளது.

விவரம் »

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார்

புதிய பிரதமருடன் தனியாகவும் சந்தித்துப் பேசுவார்

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ் வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங் கேற்பது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.  நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

                                                            விவரம்»

 

 

கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்படும் சங்கத் தமிழ் வைகாசி இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதியை சங்கத் தலைவர் இரகுபதி பாலஸ்ரீதரனிடமிருந்து இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருமதி யமுனா கணேசலிங்கம் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம். (படம்: எஸ். பாலா)

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.