புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
நிர்க்கதியான மூன்று சிறுமிகள் நடுத்தெருவில்:

நிர்க்கதியான மூன்று சிறுமிகள் நடுத்தெருவில்:

பெற்றோர் தலைமறைவு

பொகவந்தலாவை, மோரா தோட்ட கீழ் பிரிவில் உள்ள வீடொன்றிலிருந்து அநாதரவாக விடப்பட்ட நிலையில் மூன்று சிறுமிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். 9, 7 மற்றும் 5 வயதுகளையுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளே (18) மாலை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தந்தை கொழும்பில் வேலை செய்து வருபவர் எனவும் அவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தாயார் சிறுமிகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சிறுமிகள் மூவரும் (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத் தப்பட்டனர்.

இதன்போது சிறுமிகளை மஸ்கெலியா சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.