இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்ற வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம்
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை
தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த
கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி க்யூ பிரிவு
பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்
சீமான் (19) ஆஜராக நீதிமன்றத்திற்கு ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடியாணை
பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார்.