சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘தல’ அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 50
சதவீதம் முடிவடைந்துவிட்டது. படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட தயாரிப்பாளர்கள்
முடிவு செய்துள்ளனர்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள தலைப்பு வைக்காத படமும் தற்போது
ரெடியாகிவிட்டது. இதற்கிடையில் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின்
படப்பிடிப்பும் படுவேகமாக நடைபெற்று அரை கிணற்றை தாண்டிவிட்டது. அடுத்த வருடம் 2014
ஆம் ஆண்டு அஜீத்தின் ஆண்டாக இருக்கும்படி அஜீத்துக்கு தொடர் படங்கள் வெளியாக உள்ளது.
சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை
திட்டமிட்டதை போலவே அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என தயாரிப்பாளர்கள்
வேங்கடரம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
50 சதவீதம் படம் முடிவடைந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் பெரும் பகுதிகளில்
தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் இரு இனிமையான பாடல்கள் தினேஷ் மாஸ்டரின் நடன
அமைப்பில் அஜீத், தமன்னா ஜோடியுடன் படமாக்கப்பட்டது. கடும் குளிரையும்
பொருட்படுத்தாது அஜீத் குமார் படப்பிடிப்பில் தான் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம்
இன்றி எளிமையாக படப்பிடிப்பு குழுவினர்களோடு ஒருவராக பணிபுரிந்தது சக குழுவினரையும்
உற்சாக மூடியிருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தானம், பலா, விதார்த், முனீஸ், சுஹைல், ‘நாடோடிகள்’ அபிநயா, மனோசித்ரா, ‘எதிர்
நீச்சல்’ சுசா குமார், ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்பு குட்டி, பிரதீப் ராவத், கிரேன்
மனோகர், வித்யு லேகா ராமன், தேவதர்ஷினி மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த
படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், சண்டைப் பயிற்சி ஷில்வா, கலை மிலன், முழுக்க முழுக்க
ஜனரஞ்சகமாக தயாரிக்கப்படும் இந்த படத்தில் அஜித்தின் உடை அமைப்பும், பாத்திர
அமைப்பும் ரசிகர்களை கவர்வதுடன் அவர்களுக்கு பொங்கல் விருந்தாகவும் அமையும் என்று
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் கூறினார்கள்.