புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 

குளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த நடிகை

குளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த நடிகை

கொலிவுட்டில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் ஆனந்தத் தொல்லை படத்தை இயக்கியவர் பாலு ஆனந்த்.

சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள இவர் தற்போது சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை இயக்கி வருகி றார். சத்யா நாயகனாகவும், காவலன் படத்தில் நடித்த மித்ரா குரியன் நாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

சந்தித்ததும் சிந்தித்ததும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நாமக்கல் பகுதியில் நடந்து வந்தது. அப்போது நாமக்கல் மலையில் உள்ள அருவி ஒன்றில் மித்ரா அரைகுறை ஆடையுடன் குளிக்கும் காட்சியைப் படம்பிடிக்க முடிவு செய்திருந்தார் இயக்குநர் பாலு ஆனந்த்.

பாடல் காட்சியின் இடையில் வரும் காட்சி இது. இந்தக் காட்சிக்கான ஆடையைப் பார்த்துதும் அரண்டு விட்டார் மித்ரா.

இப்படியெல்லாம் காட்சி இருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே. நான் குடும்ப ரசிகர்களுக்கான நடிகை இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். எனினும், இயக்குநர் தொடர்ந்து வற்புறுத்தவே நடிக்க மறுத்து ஊருக்கே திரும்பிச் சென்று விட்டார் மித்ரா.

இதனால், தற்போது டில்லி மொடல் அழகி யுதா'h என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.