தமிழ் முன்னணி நடிகரான விக்ரமுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திடீர் மோதல்
ஏற்பட்டது. ராணா இந்திப்படங்களில் நடித்துவருகிறார். இதனை விக்ரம் விமர்சித்து
பேட்டி அளித்ததாக செய்திகள் வந்தன.
ராணா தெலுங்கில் ஆரம்பித்து இந்திக்குச் சென்றுள்ளார். தெலுங்கில் அவர் பெரிதாக
எதையும் செய்யவில்லை. தெலுங்குப் பட உலகத்தை ராணா பொருட்படுத்தவும் இல்லை.
நான் ரூ.145 கோடி (இந்தியப் பெறுமதி) செலவில் தயாராகும் ‘ஐ’ படத்தில் நடிக்கிறேன்.
தமிழ்ப் படத்தை விட்டுவிட்டு இந்திக்கு என்னால் செல்லமுடியாது என்று விக்ரம் பேட்டி
அளித்ததாகக் கூறப்பட்டது.
இதற்குக் கண்டனம் தெரி வித்த ராணா, ‘‘விக்ரம் என்னைப் பற்றி எதுவும் பேசவேண்டாம்.
அவர் தனது வேலையை மட்டும் பார்க்கட்டும். நான் சினிமாவுக்கு வந்து இரண்டரை வருடங்கள்
தான் ஆகிறது. விக்ரம் 25 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்” என்றெல்லாம்
டுவிட்டரில் ஆவேசப்பட்டு கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.
விக்ரம் - ராணா மோதல் ரசிகர்களையும் பற்றிக் கொண்டது. இருவரின் ரசிகர்களும்
ஒருவரையொருவர் திட்டி இணையதளத்தில் கருத்துக்களை பரப்பினார்கள்.
இந்நிலையில் விக்ரம், ராணா இடையே இப்பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இருவரும்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது ராணாவை அவதூறாகப் பேசவில்லை என்றும் தனது பேட்டி திரித்து வெளியிடப்பட்டு
உள்ளது என்றும் விக்ரம் விளக்கினார்.
இதையடுத்து ராணா, டுவிட்டரில் அவதூறாகப் பேசிய தற்காக விக்ரமிடம் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டார். விக்ரம் ரசிகர்களிடமும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
ராணாதான், த்ரி'hவின் காதலர் என்று திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.