கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கப் போகிறார் எனத் தகவல்
வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக உயர்ந்த கே.வி.ஆனந்த், தற்போது பேசப்படும்
இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
இவர் இயக்கிய அயன், கோ, மாற்றான் போன்ற படங்கள் கொலிவுட்டில் வசு+ல் சாதனை புரிந்த
படங்கள் ஆகும்.
இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கான கதைத் தயாரிப்பில் தீவிரமாக
இருக்கிறார் கே.வி.ஆனந்த். இந்தக் கதையில் விஜய் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படம் தொடர்பாக சமீபத்தில் விஜய்யை கே.வி. ஆனந்த் சந்தித்துப் பேசியுள்ளார்
எனவும் கூறப்படுகிறது.
தற்போது விஜய், ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் தலைவா படத்திலும், அடுத்தப்படியாக
ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ஜpல்லா படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப்
படங்களுக்குப் பின்னரே கே.வி.ஆனந்த் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.