எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஜனசக்தியின் ஆயுள் காப்புறுதி
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஜனசக்தியின் ஆயுள் காப்புறுதி
இலங்கையின் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் நிறுவனமான ஜனசக்தி
வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை நனவாக்கிடும் வகையில் அமைந்த பிரசார விழிப்புணர்வுத்
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரசார அறிமுக நிகழ்வு கொழும்பிலுள்ள பேர
வாவி வளாகத்தில் (கலாதூவ) பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஒளி
விளக்கேற்றல் நிகழ்வுடன் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.
ந்த அறிமுக நிகழ்வில் நிறுவனத்தின் ஊழியர்களுடன் பலர் பங்குபற்றி ஒளி விளக்கேற்றும்
நிகழ்வை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் தமது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதற்காக
மேடை ஒன்றும், அந்த எதிர்பார்ப்புகளை நனவாக்கிட பிரார்த்தித்து ஒளி விளக்கேற்றி
அந்த விளக்ககள் பேர வாவியில் இடப்பட்டித்திருந்தன.
இந்த ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனசக்தி நிறவனத்தின் மூலம்
வடிவமைக்கப்பட்டுள்ள நான்கு காப்புறுதித் திட்டங்களான ஜனசக்தி லைஃப் அன்லிமிடட்,
ஜனசக்தி ஜீவித்த வர்தன் ஜனசக்தி காஷ் அட்வான்ஸ் மற்றும் ஜனசக்தி விஷ்ராம போன்றன
இந்த நிகழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
வாழ்நாள் முழுவதும் மருத்துவ அனுகூலங்களை வழங்கக் கூடிய ஜனசக்தி லைஃப் அன்லிமிடெட்
திட்டம், நோய் நொடிகளின்றி நீடுழி வாழக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோய்,
கவலை, பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்வே எம் அனைவரும் கனவாகும். நாம்
முதுமையை அ¨யும் போதே வாழ்க்கையின் ஆபத்துக்கள் குறித்து அஞ்சாது ஓய்வாக வாழும்
கனவு எமக்கு ஏற்படுகிறது. ஜனசக்தி லைஃவ் அன்லிமிடெட் காப்புறுதி பத்திரம்
முதிர்ச்சியடைந்த பின்னரும் உயிராபத்துக்கள் அல்லது வைத்தியசாலை அனுமதிக்கப்படும்
போது ஏற்படும் செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் அமைந்துள்ளது.