யாழ்ப்பாணத்திலே உருவான தமிழர் கலாசாரம், பண்பாடு, உபசரிப்பு, ஒற்றுமை எல்லா
வற்றுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது ஒவ்வொருவர் மனங்களிலும் எழ
ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளியாகிவரும்
செய்திகளே! அதுவும் தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மிகவும்
கீழ்த்தரமான நடத்தைகள் தொடர்பான செய்திகள் முழுத்தமிழ்ச் சமூகத்தையும் பாதி ப்படையச்
செய்துள்ளது.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தாரைப் பார்த்து எமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளக்
கற்க வேண்டும் என்று ஏனைய பிரதேச மக்கள் விரும்பியதுண்டு. ஆனால் இன்று அதே யாழ்ப்பா
ணத்தில் நடப்பவற்றைக் கேட்டால் அப்பகுதிக்குச் சென்று வந்தாலே தீட்டு என்பதாக உள்
ளது. கோயில், குளம், தீர்த்தம் என்று பண்பாட்டு விழுமியங்களுடன் மிளிர்ந்த
யாழ்ப்பாணம் இப்போது பீச், ஹோட்டல், லொட்ச் என்று களியாட்டப் பிரதேசமாகிவிட்டது.
இதில் யாரையும் சொல்லிப் குற்றமில்லை. எல்லாம் பெற்றுத் தருகிறோம் என வீரவசனம் பேசி
ஆயுதங்களுடன் புறப்பட்டவர்கள் எமக்கு விட்டுச் சென்ற சொத்துத்தான் இவை. அவர்கள்
எதையுமே பெற்றுத் தராவிட்டாலும் இந்தப் பெயரையாவது பெற்றுத் தராமல் விட்டிருக்கலாம்.
ஆயுதமுனையில் பன்னெடுங்காலமாக மக்களைக் கட்டிப் போட்டதன் வெளிப்பாடாகவும் இவை
இருக்கலாம்.
கல்வியில் அநீதி இழைக்கப்படுகிறது எனக் கூறி ஆரம்பமான போராட்டம் இன்று கலாசாரத்தில்
பேரழிவைக் காணுமளவிற்கு அந்தச் சமூகத்தைக் கொண்டு சென்றுள்ளது. புலிகள் முற்றாக
ஒழிக்கப்பட்ட பின்னர்தான் இச்செயல்கள் வெளியுலகிற்குத் தெரிய வருகிறது. அப்படியாயின்
இவை இவ்வளவு காலமும் வெளிவராமல் நடந்துள்ளதா எனும் கேளிவியும் எழத்தான் செய் கின்றது.
எது எவ்வாறிருப்பினும் சிறந்த கல்வியறிவும், கலாசார பண்பாடும் கொண்ட யாழ்ப்பாண
சமுகத்தி லிருந்து இவ்வாறான கலாசார சீர்குலைவுச் செய்திகள் வெளிவருவது
ஒட்டுமொத்தமாக அப் பிரதேச மக்கள் அனைவருக்கும் இழிவை ஏற்படுத்துகிறது. எனவே இதற்குக்
காரணமான சக் திகளை அல்லது தனிநபர்களைக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன்னால்
நிறுத்துவது அனை வரதும் தலையாய கடமையாக உள்ளது.
இப்போது யாழ்ப்பாணத்தில் சகல பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்கள் இயங்குகின்றது. இரா
ணுவ முகாம்களும், காப்பரண்களும் கூட ஆங்காங்கே உள்ளன. எனவே பொதுமக்கள் எவர் மீதாவது
சந்தேகம் கொண்டால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கலாம். எமக்கு என்ன என்று
அல்லது இதனால் வீண் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என நினைக்கக் கூடாது.
அவ்வாறு ஒவ்வொருவரும் நினைத்தால் நிலைமையை யார் சரி செய்வது?
தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக வருவோரால் யாழ்பாண கலாசாரம் சீரழிகிறது
என்று சொல்லும் சில முகவரியில்லாத இணையத் தளங்கள் உள்ளூரிலேயே இவ்வளவு விட யங்கள்
நடப்பதை மூடிமறைக்கின்றன. எயிட்ஸ் நோய் பரவும் அளவிற்கு ஒரு பாடசாலை மாணவி
துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறார் அல்லது ஈடுபட்டிருக்கிறார் என்றால் அம்
மக்களின் கவனமின்மையை என்னவென்று சொல்வது?
வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் சொந்தங்கள் மூலமாக எயிட்ஸ் பரவுகிறது
என்று சில காலத்திற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டது. அதில் ஓரளவு உண்மையிருந்தது.
ஆனால் ஒரு சிலரது துர்நடத்தையால் எல்லோருமே பாதிக்கப்படுவது ஏனையோருக்கு மன உளைச்ச
லையே தரும். இன்று உள்ளூரிலேயே எயிட்ஸ் நோயைப் பரப்பும் காவிகள் உள்ளன. என்ற செய்தி
எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாட்டில் மேலைத்தேய நாகரிகம் மிக உச்சமாக வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் அதனை அனு
சரித்துப் போவதில் எவ்விதமான தப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தந்த
இனத்திற்குரிய கலாசாரம், பண்பாடுகள் பேணிப் பாதுகாக்கப்படுவது மிக மிக அவசியம். உல
கமே அழிந்தாலும் தமது கலாசாரத்தை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான மனிதன். அந்த
மனிதன் அன்று யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளளான். இன்று அது கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு கூறுவதால் எலலோரையும் குற்றஞ்சாட்டுவதாக அர்த்தப்படாது. ஆனால் இதுபோன்ற
செய்திகள் பிறமொழிப் பத்திரிகைகளில் வெளிவரும் போது அது யாழ்ப்பாண மண்ணின்
பாரம்பரியத்தையும், நற்பெயரையும் களங்கப்படுத்துகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
விபசாரம் போன்ற இழிசொற்களுக்கு இடமளிக்காது. புதியதொரு யாழ்ப்பாணத்தை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்டியெழுப்புவோம் எனத் திடசங்கற்பம் கொள்வோம்.
யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளாக இருப்போர் இவ்விடயங்களிலும் அக்கறை செலுத்துவது
நல்லது. வெறுமனே அரசாங்கத்தைக் குறை கூறுவதால் மட்டும் மக்களுக்குச் சேவை செய்வதாக
நினைத்துத் திருப்திப்பட வேண்டாம். இவ்வாறான குறைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக்
கொண்டுவந்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும்.