பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 50 பேர் மீது சி.ஐ.டி விசாரணை
பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட
50 பேர் மீது சி.ஐ.டி விசாரணை
எம். எஸ். பாஹிம்
பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் நேற்று சி. ஐ. டி.யினரால்
விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர்
தினகரனுக்குத் தெரிவித்தார்.
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 50 இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அனுப்ப
பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது. இதன்படி அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 42
ஆண்களும் 8 பெண்களும் நேற்று காலை 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக
இலங்கையை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான விஸா இல்லாததால் அங்கிருந்து
நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சி. ஐ. டி.யினரால்
விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.