‘தேர்தலுக்கு முன்னரே புரிந்து விட்டது’ - ஐ.ம.சு.மு.
தெரியும். அதனால் முன்கூட்டியே ஐ.தே.க. செயலாளர் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மறுபக்கம் சஜித் பிரேமதாஸ, ரோஸி சேனாநாயக்க, புத்திக பத்திரன போன்ற ஐ.தே.க.
எம்.பிகள் ஐ.தே.க.வுக்கு எதிராக வேறு குழுக்களை தேர்தலில் நிறுத்தியுள்ளனர்.
ஐ.தே.க.வின் பிளவு உக்கிரமடைந்துள்ளது. ஐ.தே.க.வில் பிளவை ஏற்படுத்திய மங்கள சமரவீர
இன்று ஜே.வி.பி. பிளவு குறித்து பேசுகிறார். வங்குரோத்து நிலை அடைந்துள்ள
எதிர்க்கட்சி இராணுவத்தை அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்துவதை விமர்சித்துள்ளது.
மீண்டும் இராணுவத்திற்கு துப்பாக்கியை கொடுக்கவா ஐ.தே.க. கூறுகிறது.
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியதாவது:
கிராமங்களின் ஆட்சியை ஐ.ம.சு.மு. வுக்கு வழங்கிய மக்கள் மாநகர சபைகளின் ஆட்சியையும்
எமக்கு அளிப்பது உறுதி. ஐ.தே.க. மேடைகளில் பேசுவதற்கு இன்று யாருமில்லை. வரலாற்றில்
ஒருபோதுமில்லாதவாறு இம்முறை ஐ.தே.க. படுதோல்வி அடையும்.
கட்சிக்குள் கட்டுப்பாடில்லாது ஐ.தே.க. எப்படி மாநகர சபையை நிர்வகிக்கும். ஐ.தே.க.
ஆட்சியில் குப்பையாக இருந்த கொழும்பு இன்று அழகிய நகராகியுள்ளது. ஐ.தே.க. ஆட்சியில்
அபிவிருத்தி செய்யப்படாத கண்டி நகரை அபிவிருத்தி செய்ய 20 பில்லியன் ரூபா செலவில்
திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.