நவராத்திரி என்பது ஒன்பது ராத்திரிகளைக் கொண்டு விளங்கினாலும் இந்த வருடம் இம்முறை
நவராத்திரி எட்டு நாட்களைக் கொண்டதாக உள்ளது.
இலங்கையிலிருந்து வெளிவரும்
திருக்கணித, வாக்கிய பஞ்சாங்கங்கள் இரண்டும், இம்முறை நவராத்திரி விரதம் எட்டு
நாட்களைக் கொண்டதாக உள்ளது என அறிவித்துள்ளன.
அதன்படி சிலர் நவராத்திரி விரதத்தில்
இன்று மூன்றாவது நாளாக கருதி ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கும் மற்றும் சிலர் இன்று நாலாவது
நாளாக கருதி ஸ்ரீ லட்சுமி அம்மனுக்கும் பூஜை நடத்துவார்கள்.