தபால் மூலம் வாக்களிகப்பு சமூகமாக இடம்பெற்றதாகவும் அசம்பாவிதங்களோ, முறைகேடுகளோ
அறிவிக்கப்படவில்லை எனவும் தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி
கூறினார்.
தபால் மூல வாக்களிப்பையொட்டி வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் விசேட பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் திணைக்கள பிரதிநிதிகள், கண்காணிப்
பாளர்கள் போன்றோர் கண்காணிப்புக் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாலை 4.00 மணி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.
இன்று மாலை 4.00 மணியுடன் தபால் மூல வாக்கெடுப்பு முடிவடையும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி
நடைபெறும்.