ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
தபால் மூல வாக்கெடுப்பு நேற்று ஆரம்பம் இன்று மாலைவரை வாக்களிப்பு

தபால் மூல வாக்கெடுப்பு நேற்று ஆரம்பம் இன்று மாலைவரை வாக்களிப்பு

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமானது. இம்முறை தபால் மூலம் வாக்களிக்க 4505 பேர் தகுதி பெற்றுள்ளனர்.


(படம்: கல்முனை குறூப், கல்முனை
தினகரன் விசேட நிருபர்கள்)

தபால் மூலம் வாக்களிகப்பு சமூகமாக இடம்பெற்றதாகவும் அசம்பாவிதங்களோ, முறைகேடுகளோ அறிவிக்கப்படவில்லை எனவும் தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி கூறினார்.

தபால் மூல வாக்களிப்பையொட்டி வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் திணைக்கள பிரதிநிதிகள், கண்காணிப் பாளர்கள் போன்றோர் கண்காணிப்புக் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மாலை 4.00 மணி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

இன்று மாலை 4.00 மணியுடன் தபால் மூல வாக்கெடுப்பு முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி