இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8வது ஜனாதிபதியை தெரிவு
செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. சுமார் 30 வருடங்களுக்கு
பின்னர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் இதுவாகும்.
காலையிலேயே வாக்குச் சாவடிக்கு
சென்று வாக்களியுங்கள்
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனை களை பாது காப்பு
பிரிவினருக்கு வழங்கியிருப்ப தாகவும் இன்று காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு
சென்று வாக்குகளை அளிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை
கேட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக் கையில் மேலும் கூறப்பட்டு ள்ளதாவது,2005 ஆம் ஆண்டு மக்களின் ஆணையை பெற்றுக் கொண்டதையடுத்து இரண்டு வருட பதவிக் காலம்
மீதுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முன்வந்தமை ஜன நாயகத்தின் மீது எனக்கு
உள்ள நம்பிக்கையை மற்றும் கெளரவத்தின் காரணமாகவேயாகும்.
வாக்கு மோசடி முறைப்பாட்டை
ஏற்றுக் கொள்ள
விசேட பிரிவு
அழையுங்கள்: 0112-877629-31
இடம்பெறும் வாக்கு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவென தேர்தல்
திணைக்களத்தினால் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் வாக்கு மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக அறிவிக்கும்
பட்சத்தில் அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்று தேர்தல்கள் திணைக்களம்
தெரிவித்தது.