வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010


மட்டக்களப்பு - மாவடிஓடை பாலத்தை புனரமைக்கும்படி கோரிக்கை

மட்டக்களப்பு - மாவடிஓடை பாலத்தை புனரமைக்கும்படி கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திலு ள்ள மாவடி ஓடை பாலத்தினை விரைவில் புனர்நிர்மாணம் செய்து தருமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள் ளனர். இவ் விவசாயிகள் நெல் அறுவடை முடிந்ததும் நெல்லைத் தமது சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

எனினும் தற்போது மாவடி ஓடைப் பாலம் இடிந்து காணப்படுவதால் நெல்லைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக் கிறது.

எனவே இப் பாலத்தை விரைவில் புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மகஜர்கள் அமைச்சர் வீ. முரளிதரன் கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன், விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. (ஐ - எ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •