புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 
சனிப்பெயர்ச்சியின் பலாபலன்கள்

சனிப்பெயர்ச்சியின் பலாபலன்கள்

சனிப் பெயர்ச்சி பலன்கள் வாக்கிய பஞ்சாங்க கணிப்பின் படி 21.12.2011 முதல் 02.11.2014 வரையிலான பன்னிரண்டு ராசி பலன்கள் வருகின்ற மார்கழி மாதம் தமிழுக்கு 5ம் திகதி அதாவது 21.12.2011 புதன் கிழமை அன்று சனிஸ்வர பகவான் தனுசு லக்கினத்தில் பெயர்ச்சியாகி தனது உச்ச வீடான துலா ராசியில் இரண்டரை ஆண்டு காலம் அதாவது 02.11.2014 வரை இருந்து பலன்களை தர இருக்கின்றார்.

மேடம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இதுவரை உங்களுக்கு நன்மையாக பலன்களை தந்த சனி பகவானால் பகைவர்களை வென்றும் பிரமிக்கத் தக்க செயற்பாடுகளையும் செய்து வந்தீர்கள். மேலும் சாயா கிரகமான ராகு பகவானும், கேதுபகவானும் துணை நின்று தொழில் துறைகளில் யோகத்தையும், மங்களகரமான காரியங்களையும் சந்தோஷத்தையும் அனுபவித்து வந்தீர்கள். இப்பொழுது கேது 2ம் இடத்திலும் ராகு 8ம் இடத்திலும் வந்து சனி பகவான் உங்கள் ராசிக்கு கண்டத்து சனியாக வருகின்றான். போக்குவரத்தின் பொழுதும் இரும்புடன் சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்களும், இயந்திர தொழிலாளர்களும் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களுடன் வீண்பேச்சுக்களை வைத்து கொள்ள கூடாது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே புரிந்துணர்வுகள் குறையும் மேலும் மனைவியின் உடல் நலத்திலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசாங்க உத்தியோகத்தர்கள் தொழில் புரியும் இடங்களில் முன் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வீண் வழக்குகளுக்கு உள்ளாக வேண்டி வரும். உங்களது காரியத்துடன் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்ளுங்கள். தேவையில்லாதவர்களின் உறவுகளை தவிர்த்து கொள்ளுங்கள் பெண்களுடன் பிரச்சினை ஏற்படலாம். திருடர்களால் பயம் ஏற்படும். பங்கு வியாபாரத்திலும் பாதிப்புக்கள் ஏற்படலாம். கலைத்தொழில் ஈடுபடுபவர்கள் பலவித சிரமங்களுக்கு உள்ளாக வேண்டி வரும். தேவையில்லாத கோபம் ஏற்படும். காதலில் சச்சரவு தோன்றும் பெற்றோர்களின் நலன்கள் பாதிப்படையலாம். சனி வக்கிரமடையும் போது நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

வியாபார தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பங்கு பிரச்சினை ஏற்படலாம். நண்பர்களாலும் பிரச்சினை தோன்றும். தேவைக்குப் பணம் சேராது இதனால் பல பிரச்சினைகள் தோன்றும். அதிக முதலீடுகளை தவிர்த்து கெள்வது நன்று. சொத்துக்களால் பிரச்சினை ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்காது. ஓய்வு கிடைப்பது அரிதாகும். குறிப்பாக நம்பி ஏமாற வேண்டாம். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பலவித சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். இருப்பதையும் இழக்க வேண்டி வரும்.

முன் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்கும். அரசியல் நண்பர்கள் கைவிட்டு விடலாம். மாணவர்கள் கல்வி கற்றலில் பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். மற்றவர்களால் உங்கள் கல்வி முயற்சிக்கு இடையூ வரலாம். தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் தலையிட கூடாது. பெண்களின் திருமணம் தாமதமாகும். தேவையில்லாத அறிமுகங்கள் ஏற்படலாம். கணவன், மனைவியிடையே பிரச்சனைகள் தோன்றலாம். கைத்தொழில்கள் பாதிக்கப்படலாம். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து விஷ்ணு, ஆஞ்சநேயர், சனி பகவான், முருகன் வழிபாடு உங்களுக்கு சிறந்தது, ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகர் வழிபாடும் செய்து கொண்டால் கண்ட சனியின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு கொள்ளலாம்.

இடபம் (கார்த்திகை 2ம்,

3ம், 4ம், பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்)

5ம் இடமான கன்னி ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு சத்ருஸ் தானத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். இது நல்ல பலன்களை உங்களுக்கு தரும். இதனால் பகைவர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். அலுவலகங்களில் உங்கள் மதிப்பு உயரும். நினைத்த காரியம் கைகூடி வரும். உங்கள் மதிப்பு உயரும். வாகன வசதிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். உங்களை கைவிட்டவர்கள் திரும்பி வரலாம் ஏற்படும் ராகு, கேது மாற்றத்தினால் சனியுடன் ராகு சேரும் போது நல்ல யோகம் உண்டாகும். இதனால் நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள். பதவி உயரும். பணம் தாராளமாக வந்து சேரும். மின்சார ஊழியர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

உங்கள் அலுவலகத்தில் தொந்தரவு தந்தவர்கள் விட்டு விலகி விடுவார்கள். உங்களது செயற்பாடுகள் விரிவடையும். எதிரிகள் அடிபணிவர். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். காணி சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். உடல் நலத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மனைவியின் உடல் நலம் பாதிப்படையலாம். சனியின் வக்கிர காலங்களில் சில கெடு பலன்கள் ஏற்படலாம். அக்காலங்களில் முன் எச்சரிக்கை நன்று கலைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு சமூகத்தால் அதி உயர் கெளரவம் கிடைக்கும் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கலைத்துறையில் நல்ல அந்தஸ்தும் கிடைக்கும். சனி வக்கிரத்தின் போது முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். எந்த தொழில் துறையாக இருந்தாலும் நீங்கள் உயர்வடைவீர்கள். கட்டடம், இரும்பு தொழிற்துறை உங்களுக்கு நன்மை தரும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். உடலில் புதிய உற்சாகம் பிறக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் நல்ல நிலைமைக்கு உயர்வார்கள்.

போட்டி அரசியலில் ஈடுபடுபவர்கள் மறைந்து விடுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சனி ராகுவுடன் சேரும் போது அதி உச்ச பலன்களை அடைவீர்கள். மாணவர்களின் கல்வியில் உயர்வு ஏற்படும். புதிய நல்ல எண்ணங்கள் உருவாகும். உயர் கல்விக்கான புலமைப் பரிசில்கள் கிடைக்கலாம். பொறியியல் துறை மாணவர்களுக்கு சிறப்பான காலம். விவசாய கல்விக்கும் சிறந்தது. திருமணம் தாமதமாகி பெண்களுக்கு நிறைவேறும். பிறருடன் பழகுவதில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம் (மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ம், 2ம், 3ம், பாதம்)

உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம் சனியாக இருந்து பலவித தொல்லைகள் தந்து எதிலுமே முன்னேற்றமில்லாத நிலையில் இருந்து சந்தோஷம் இல்லாது வாழ்ந்து வந்த நீங்கள் இப்பொழுது 5ம் இடத்து சனியாக துலா ராசியில் சனி பகவான் பிரவேசிப்பது பூரண மகிழ்ச்சியை தராவிட்டாலும் எல்லா விடயங்களிலும் திருப்தி நிலையை அடைய கூடிய நிலைக்கு ஆளாகுவீர்கள். அலுவலகங்களில் இருந்து உங்களுக்கு தொல்லை தந்தவர்கள் உங்களிடம் தாமாகவே சரணடைந்து விடுவார்கள். உங்களிடம் உள்ள திறமைகளை மற்றவர்கள் உணரத் தொடங்குவார்கள். உங்களது சேவை எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாது அருவி போல் ஓடிக் கொண்டிருக்கும். அறிமுகம் இல்லாதவர்கள் கூட தாமாக முன் வந்து உதவி செய்வார்கள்.

கலைத் தொழில் ஈடுபடுபவர்கள் இந்த சனி கிரக மாற்றத்தால் நல்ல நிலைக்கு வரக்கூடிய சந்தப்பங்கள் உண்டாகும். சினிமாத்துறையில் ஈடுபட்டவர்களுக்கும் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அவ்வப்போது பணமும் வந்து சேரும். பல்வேறு தொழிற்துறையில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை கையை சுட்டுக் கொண்டவர்களுக்கு இனி குதூகலமான காலம் தான் தொழிலில் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கும் புதிய உற்சாகம் பிறக்கும். அரசியலில் மனம் நொந்தவர்களுக்கு புதிய உறவுகள் கிடைக்கும். இதனால் நல்ல பதவியும் கிடைக்கும். போட்டி அரசியல் வாதிகள் நண்பர்களாவார்கள்.

மாணவர்கள் இது வரை காலமும் கல்வியில் பின்னடைவை சந்தித்தவர்கள் கூட புது உத்வேகத்துடன் கல்வியில் அக்கறை காட்டுவார்கள். கல்வியால் முன்னேற்றம் அடைவீர்கள். குழம்பி போயிருந்த திருமண பேச்சுக்கள் சரிவரலாம். எதிலும் ஒரு திருப்தியான முன்னேற்த்தை காணலாம். மஹாவிஷ்ணு வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, சனிக்கிரக வழிபாடு நன்மை தரும். மேலும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து கொள்ளுங்கள்.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்)

இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருந்து பலவிதத்திலும் பல துறைகளிலும் நல்ல முன்னேற்றம் தந்த உங்களுக்கு இப்பொழுது சனி பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் அர்தாஷ்டம் சனியாக வருவது அவ்வளவு சிறப்பு அல்ல. நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதி காத்து நடந்து கொள்கிaர்களோ அவ்வளவுக்கு உங்களுக்கு நன்மை. இதனால் நீங்கள் வீண் சிரமங்களில் இருந்தும் வீண் வம்புகளில் இருந்தும் தப்பி விடுவீர்கள். தலைமை அதிகாரிகளுடன் பிரச்சினை ஏற்படலாம். வேலை மாற்றமும் ஏற்படலாம். பதவி இறக்கத்துக்கும் சந்தர்ப்பம் உண்டு.

வாகன போக்கு வரத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இரும்பு, சீமெந்து தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் உங்களது நேரடி கண்காணிப்பு நன்மை தரும். இல்லையேல் இருப்பதையும் இழக்க வேண்டி வரும் வீண் அவமானத்துக்கும் உள்ளாகலாம். கணவன் மனைவியிடையே சச்சரவுகள் ஏற்படலாம். ஆபத்துக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். கலைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு சிரமங்கள் நிறைந்திருக்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையலாம். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாக இருக்காது. முதலீட்டாளர்களும் பலத்த சோதனைக்கு உள்ளாக வேண்டி வரும். பண வைப்புகளிலும் பிரச்சினை தோன்றும்.

வாகன சம்பந்தமான முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நினைத்ததை சாதிக்க முடியாமல் போய் விடும். வீண் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அரசியலில் இறக்கம் ஏற்படலாம். கல்வியில் ஆர்வத்துடன் செயற்பட்ட மாணவர்கள் வேறு கேளிக்கைகளில் ஈடுபட தூண்டப்படுவார்கள். கல்வியில் பின்னடைவு ஏற்படலாம். மாணவர்கள் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போய் விடும். திருமண பேச்சு வார்த்தைகள் குழப்பத்தில் முடிவடையும். முடிவு செய்த திருமணம் தாமதமாகும். சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு சனிக்கிரக வழிபாடு, சுவாமி ஐயப்ப வழிபாடு, அஞ்சநேயர் வழிபாடு சிறந்தது. சனிக்கிழமை விரத வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

(தொடரும்)

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.