பெரியநீலாவணை புலவர்மணி 'ரிபுத்தீன் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு
பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தின்
இல்ல விளையாட்டு
கமு/ பெரிய நீலாவணை புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலய இல்ல விளையாட்டு விழா
கடந்த 4, 5, 6ம் திகதிகளில் அதிபர் எம். எச். குமாயூன் தலைமையில் பாடசாலை
மைதானத்தில் நடைபெற்றது.
மிக விமர்சையாக நடந்தேறிய இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு அம்சங்களோடு மரதன்
ஓட்டம், கழகங்களுக்கிடையிலான கலப்பு அஞ்சல் ஓட்டம் என்பன இறுதி நாள் நிகழ்விலே
இடம்பெற்றது.
நிகழ்வின் அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.
அப்துல் ஜெலீல் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எச். எம். ஏ. வதூத் கெளரவ அதிதியாகவும்,
சிறப்பு அதிதிகளாக கலாநிதி உமர் மெளலானா அதிபர் அல் ஜாபர் நிறுவனத்தின் உரிமையாளர்
எம். ஐ. அப்துல் அkஸ், பறக்கத் டெக்ஸ் உரிமையாளர் எம். ஐ. பரீட் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
மேற்படி இல்ல விளையாட்டு விழாவில் ஒக்கிட் இல்லம் முதலிடத்தையும், றோஸ் இல்லம்
இரண்டாம் இடத்தையும் லோட்டஸ் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
மேற்படி நிகழ்வுகளை பாடசாலையின் விளையாட்டுக் குழுச் செயலாளர் ஏ. எம். சஹாப்தீன்
ஆசிரியர் நெறிப்படுத்தியுள்ளார்.