புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

ஐ.பி.எல்லும் இலங்கை வீரர்களும்

ஐ.பி.எல்லும் இலங்கை வீரர்களும்

ந்தியாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை வீரர்களின் அசத்தலான ஆட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கைக்கு பெருமை என்று கூறினாலும் மிகையாகாது.

.பி.எல். போட்டிக்குத் தெரிவாகியுள்ள இலங்கை வீரர்கள் சனத் ஜயசூரிய, டில்சான், சங்கக்கார, ஜயவர்தன, மஃறூப், வாஸ், மெத்திவ்ஸ், திஷார பெரேரா, பெர்னாண்டோ, மலிங்க, முரளிதரன் போன்ற முன்னணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் வெற்றியீட்டுவது குறிப்பிடத்தக்கது.

துவரை நடந்த ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் பலர் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெக்கான் அணியின் சமிந்த வாஸ் சென்னை அணியுடனான போட்டியில் சிறப்பான முறையில் பந்து வீசி தனது திறமையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

லங்கை அணியின் முன்னணி வீரர்களின் திறமையான ஆட்டம் சர்வதேச மட்டத்தில் பேசப்படும் அளவுக்கு வந்துள்ளமை அனைவரையும் பாராட்டத்தக்க விடயமாகும். எது எப்படியோ இலங்கையின் புகழ் சர்வதேச மட்டத்தில் உயர வாழ்த்துவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.