புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

தேயிலையை முறையாக பராமரிக்குமாறு கோரி செனன் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேயிலையை முறையாக பராமரிக்குமாறு கோரி செனன் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்ட ஜீ.டி. பிரிவின் தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரி இத்தோட்ட தொழிலாளர்கள் 100 பேர் கடந்த 26 ஆம் திகதி காலை தொழிற்சாலை காரியலா யத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செனன் தோட்ட ஜீ.டி பிரிவின் தேயிலை மலை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பராமரிக் கப்படாமல் காடாக மாறி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தேயிலைச் செடிகளில் விஷப் பூச்சிகள், பாம்புகள் காணப் படுவதால் தினமும் தொழிலுக்கு செல்ல முடியாத அச்சத்தில் உள்ளதா கவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். காட்டு மிருகங்கள் மற்றும் குளவித் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து கோஷங்களை எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் நலன் கருதி தேயிலைச் செடியின் பராமரிப்பை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.