மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிரையன் லாரா போல், அவரின் பள்ளி சாதனைகளையும்
முறியடித்த இன்னொரு இளம் சாதனை வீரர் வரவுள்ளார்.
மேற்கிந்திய தீவு கிரிக்கெட்டில் பல பெரிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது.
அதில் பிரையன் லாரா அளவுக்கு உச்சம் பெற்றவர்கள் ஒருவரும் இல்லை.
இதே போல் கர்ஸ்டன் காளிசரண் என்ற 14 வயது இளம் வீரர் டிரினிடாட்-டொபாகோவின் 15
வயதுக்குட்பட்ட அணியின் அணித்தலைவராக உள்ளார்.
இவர் மே மாதம் 11ஆம் திகதி போர்ட் ஆ/ப் ஸ்பெயின் மைதானத்தில் 35 ஓவர்களில் 404
ஓட்டங்களை விளாசி புதிய சாதனை புரிந்துள்ளார்.
வாலென்சியா ஹை ஸ்கூல் அணிக்கெதிரான இந்த காலிறுதி ஆட்டத்தில் 44 பவுண்டரிகள் 31
சிக்சர்கள் விளாசிய இந்த இளம் அதிரடி வீரர் 35 பந்துகளிலேயே சதத்தைப் பு+ர்த்தி
செய்தார்.
அது மட்டுமல்லாது இவர் ஏற்கனவே லாராவின் பள்ளிக் கிரிக்கெட் சாதனையையும்
முறியடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி இடது கை பேட்ஸ்மென் ஆல்வின் காளிச்சரண்
பெயரை இந்த இளம் வீரர் பெயர் கொண்டிருப்பதால் ஆல்வின் காளிச்சரண் மற்றும் பிரையன்
லாரா ஆகிய இருவரது கலவை யாகவும் இவர் திகழ்வார் என்ற பெருத்த எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.