இந்திய சினிமா இசையின் ஜாம்பவான்களான இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து ஒரு
பாடலை உருவாக்கப் போகிறார்கள்.
இது படத்துக்காக அல்ல... இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட! இந்தத்
தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவர் சி. கல்யாண் தெரிவித்தார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக இந்தப் பாடல்
இடம்பெறவிருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானும்
இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில்
வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
இருவருமே இந்தக் கோரிக்கையை புன்னகையுடன் கேட்டுக் கொண்டாலும், இன்னும் அதுகுறித்து
உறுதியான பதிலைச் சொல்லவில்லையாம்.
இது குறித்து கல்யாண் கூறுகையில், ‘பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ. ஆர்.
ரஹ்மானும் இந் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கிறார்கள். இது
குறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆயினும், விரைவில் அந்த உன்னதமான
பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்தப்
பாடல் அரங்கத்தில் நிகழ்த்தப்படும் என்றார்.