தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஆந்திர திரையுலகத்திலும் பரபரப்பாக பேசப்படும்
விடயம் சிம்பு - ஹன்சிகா காதல் விவகாரம்தான். வேட்டை, மன்னன், வாலு படங்களில்
இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம்
ஏற்பட்டதாகவும் அதுவே நாளடைவில் காதலாக மாறியதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.
இது போதாதென்று ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
என்று சிம்புவின் தந்தை டி. ராஜேஸ்தர் தெரிவித்ததாகவும் செய்திகளும் வெளியாகின.
தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக அண்மையில் ஹைதராபாத் சென்றிருந்த ஹன்சிகாவிடம்
டி. ஆர். பேட்டி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிம்புவும் நானும்
காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகளால்
மன வருத்தம் அடைந்துள்ளேன். எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லை. இரண்டு பேரும்
நண்பர்களாகவே பழகி வருகிறோம்.
எனக்கு ஜோடியாக நடிக்கும் மற்ற கதாநாயகர்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படித்தான்
சிம்புவுடனும் பழகி வருகிறேன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன்.
இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.