புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

சினிபஜார் கேள்வி - பதில்

சினிபஜார் கேள்வி - பதில்

எஸ்.மாலா நீர்கொழும்பு

கே: கொஞ்சம் வித்தியாசமான சினிமா ஜோக் ஒன்று சொல்லுங்களேன் வர்ஷினி?

ப: கணவன்: “என்னடி பிச்சைக் காரனை வீட்டுக்குள்ளே டி.வி பார்க்க விட்டிருக்கிற?”

மனைவி: “அந்தக் காலத்துல அவர் தயாரிச்ச படமாம் ஆசைப்பட்டார்”

எம்.எஸ்.பாஸ்கர். நுவரெலியா

கே. என்ன வர்ஷினி இது. நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவுடன் நடிகை அஞ்சலி குத்தாட்டம் போட்டிருக்கிறாராமே உண்மையா?

ப: உண்மைதான். அது சரி உங்களுக்கு ஏன் குடைகிறதா? சிங்கம்-2 படத்தில் அட்டகாசமான குத்தாட்டம் ஒன்றை சிங்க முத்துவுடன் போட்டிருக்கிறா ராம் அஞ்சலி. சூர்யா நடிப்பதால்தான் ஒரு பாட்டுக்கு ஒத்துக்கிட்டேன் என்று சூர்யா ரசிகையாகவே மாறிப்போனார் (அதுசரி இந்த விஷயம் வடிவேலுக்கு தெரியுமா)

எஸ்.பானுமதி, வவுனியா

கே: இந்த வார பரபரப்பான கிசு கிசு என்னவாம்?

ப: ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் ‘தல’யுடன் நடிக்க வந்த வாய்ப்பை அதிக சம்பளம் கேட்டு கெடுத்துக்கொண்டார். ‘அனுஷ்கம்’. இதையடுத்து அப்பட நிறுவனம், கோலிவுட்டுக்கு தற்காலிகமாக குட்பை சொன்ன தமன்னத்துக்கு கேட்ட சம்பளத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டனர். கொஞ்சம் ‘பி.கு’ செய்தால் சம்பளமும் ஏறும் வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்பியிருந்த அனுஷ்கத்தின் ஆசையில் மண் விழுந்து விட்டது.

ஆர்.எம்.பாலா, புத்தளம்

கே: நடிகர் தனுசும் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டாராமே. உண்மையா வர்ஷினி?

ப: ஆமாம். அடுத்த கொல வெறி ஹிட்டுக்கு ரெடியாகிவிட்டார் தனுஷ்’ அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ‘எதிர்நீச்சல்’ பட பாட்டில் ‘நச்’ ஆட்டம் போட நயன்தாராவுக்கு அழைப்புக் கொடுத்திருக்கிறார். அம்மணி ‘ம்...’ என்று ஃபுல் ஸ்விங்கில் ஓகே சொல்லிவிட்டார்.

கே.எம்.முத்துலிங்கம், யாழ்ப்பாணம்

கே: மனோகரா படத்தில் அனல் பறக்க வசனம் பேசிய நடிகை கண்ணாம்பாள் தமிழ் பெண்ணாக அவரைப் பற்றிக் கொஞ்சம்.....?

ப: ஆந்திராவிலிருந்து வந்த கண்ணாம்பாள் 1927லிருந்து 16 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார். முதல் நாடகமான அரிச்சந்திராவில் சந்திரமதியாக நடித்து புகழ்பெற்றார். நாரலா நாடக சமாஜன் என்ற நாடக மன்றத்தின் நிர்வாகிகளில் ஒருவரான கே.டி.நாகபூஷணத்தை திருமணம் செய்து கொண்டார். முதன் முதலில் ஹரிச்சத்திரா படத்தில் நடித்தார். தமிழில் வசனம் பேசி அவர் நடித்த படம் ‘கிருஷ்ணதூது’. தெலுங்கில் எழுதிவைத்து தமிழ் பேசிய கண்ணாம்பாள் பின்னாளில் ‘மனோகர்’ படத்தில் நேரடியாக தமிழில் பேசி கரகோஷம் பெற்றார். குழந்தைகள் இல்லாததால் ஆண், பெண் என இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவந்தார்.

எஸ்.பாரூக், மாவனல்ல

கே. சமூபத்தில் அமெரிக்கா சென்று வந்த நடிகை அமலா பால், அங்கிருந்து என்ன வாங்கி வந்திருக்கிறார்?

ப: அழகை தூக்கிக் காட்ட ஸ்பெஷல் ஊசி போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.

ஆர்.எம்.வசந்தி, தியத்தலாவ.

கே. நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய் எங்கே போய்விட்டார். அவரைக் காணவில்லையே?

ப: சிவஞானம் இயக்கும் டீல் படத்தில் நடிக்கிறார். நடிகை யார் தெரியுமா ராதாவின் மகள் கார்த்திகா.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.